சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
5.100
திருநாவுக்கரசர்
தேவாரம்
வேத நாயகன்; வேதியர் நாயகன்; மாதின் பண் - திருக்குறுந்தொகை (பொது -ஆதிபுராணத் திருக்குறுந்தொகை ) Audio: https://www.youtube.com/watch?v=lk4SHPhE4ng |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.100  
வேத நாயகன்; வேதியர் நாயகன்; மாதின்
பண் - திருக்குறுந்தொகை (திருத்தலம் பொது -ஆதிபுராணத் திருக்குறுந்தொகை ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
வேத நாயகன்; வேதியர் நாயகன்; மாதின் நாயகன்; மாதவர் நாயகன்; ஆதிநாயகன்; ஆதிரைநாயகன்; பூதநாயகன் புண்ணியமூர்த்தியே. | [1] |
செத்துச் செத்துப் பிறப்பதே தேவு என்று பத்திசெய் மனப்பாறைகட்கு ஏறுமோ, அத்தன் என்று அரியோடு பிரமனும் துத்தியம் செய நின்ற நல்சோதியே? | [2] |
நூறுகோடி பிரமர்கள் நொந்தினார்; ஆறுகோடி நாராயணர் அங்ஙனே; ஏறு கங்கை மணல், எண் இல் இந்திரர்; ஈறு இலாதவன் ஈசன் ஒருவனே. | [3] |
வாது செய்து மயங்கும் மனத்தராய் ஏது சொல்லுவீர் ஆகிலும், ஏழைகாள்! யாது ஓர் தேவர் எனப்படுவார்க்கு எலாம் மாதேவன்(ன்) அலால் தேவர் மற்று இல்லையே. | [4] |
கூவல் ஆமை குரைகடல் ஆமையை, கூவலோடு ஒக்குமோ, கடல்? என்றல் போல், பாவகாரிகள் பார்ப்பு அரிது என்பரால், தேவதேவன் சிவன் பெருந்தன்மையே. | [5] |
பேய்வனத்து அமர்வானை, பிரார்த்தித்தார்க்கு ஈவனை, இமையோர் முடி தன் அடிச் சாய்வனை,-சலவார்கள்-தமக்கு உடல் சீவனை, சிவனை, சிந்தியார்களே. | [6] |
எரி பெருக்குவர்; அவ் எரி ஈசனது உரு வருக்கம் அது ஆவது உணர்கிலர்; அரி அயற்கு அரியானை அயர்த்துப் போய் நரிவிருத்தம் அது ஆகுவர், நாடரே. | [7] |
அருக்கன் பாதம் வணங்குவர், அந்தியில்; அருக்கன் ஆவான் அரன் உரு அல்லனோ? இருக்கு நால்மறை ஈசனையே தொழும் கருத்தினை நினையார், கல்மனவரே. | [8] |
தாயினும் நல்ல சங்கரனுக்கு அன்பர்- ஆய உள்ளத்து அமுது அருந்தப் பெறார்- பேயர், பேய்முலை உண்டு உயிர் போக்கிய மாயன் மாயத்துப் பட்ட மனத்தரே. | [9] |
அரக்கன் வல் அரட்டு ஆங்கு ஒழித்து, ஆர் அருள் பெருக்கச் செய்த பிரான் பெருந்தன்மையை அருத்தி செய்து அறியப் பெறுகின்றிலர்- கருத்து இலாக் கயக்கவணத்தோர்களே. | [10] |